மாகாண சபை தேர்தல்கள் அனைத்தும் ஒரே தினத்தில்-ரணில்

215 0

மாகாண சபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் வைக்க அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தலை ஒரே தினத்தில் வைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த பாராளுமன்றத்தின் போது இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதியுடன் கலந்துரையாட தயார் என பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment