பாலித ரங்கே பண்டாரவின் மகனைக் கைது செய்ய பொலிஸார்……….

218 0

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகும் போது அவர் போதையில் இருந்துள்ளமை மருத்துவ பரிசோதனையின் போது உறுதியாகியுள்ளதாகவும், இவர் தொடர்பான விடங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவரைக் கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சரின் மகன் செலுத்திய வாகனம் அமைச்சு ஒன்றுக்கு சொந்தமானது எனவும், இந்த வாகனம் இன்று அதிகாலை சிலாபம் – புத்தளம் வீதியிலுள்ள பங்கதெனிய – கொட்டபிட்டி எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment