யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன் 3 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்!

284 0

jaffna-court-e1435855248765நீதிமன்றத்திற்கு கல்லெறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(செவ்வாய்க்கிழமை) வழக்கு விசாரணைக்காக மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் இவர்களது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அஜந்தன், அகிலன், ஜெகதீஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களே இன்று அவர்களது வழக்கை நிறைவு செய்வதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

நீதிமன்றத்தினால் இவர்களது வழக்கு நிறைவுசெய்யப்பட்டு மூவரும் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்த காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவில் இரு காவல்துறையினர் சீருடையிலும், மற்றயவர்கள் சிவிலுடை அணிந்திருந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள்  தெரிவித்துள்ளனர்.