25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதி

307 0

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியள்ளது.

குறித்த வேன் டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், வீதி வழுக்கியதால் சாரதியால் வேனின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment