கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி, மகள் நீதிமன்றில் ஆஜர்

286 0

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பெண்ணொருவரை தக்க முற்பட்ட சம்பவமொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இவர்கள் நீதிமன்றில் ஆஜராகியதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கடந்த 1ம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment