118 பேரின் பட்டியலை உடன் வழங்குமாறு சபாநாயகரும் வேண்டுகோள்

218 0

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரின் பெயர் இடம்பெற்றுள்ள சீ. 350 அறிக்கையை தனக்கு உடன் அனுப்புமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (01) காலை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் தொலைபேசி அழைப்பில் தொடர்புகொண்டு சபாநாயகர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment