அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியின் ஆட்சியமைப்பதே நோக்கம்- 16 பேர் குழு

206 0

சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நிலைநாட்டுவதே தமது நோக்கம் என அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. கூறியுள்ளார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பின் போது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட குழுவுக்கு கட்சியைக் கொண்டு செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment