அர்ஜூன் அலோசியஸ் வழங்கி காசோலை-பொன்சேகா

222 0

மத்திய வங்கியின் முறிவிநியோகம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள, அர்ஜூன் அலோசியஸ், தேர்தலுக்காக தமக்கு பணம் பெற்று கொடுத்ததாக அமைச்சர் பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தின் போது, அர்ஜூன் அலோசியஸ் தன்னை சந்திக்க வந்து, தன்னிடம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி சென்றார்.

அதனை தான் எதிர்ப்பார்கவில்லை என தெரிவித்த அவர், தனக்கு அருகில் இருந்த வேட்பாளர்கள் இருவரிடம் குறித்த காசோலையை தான் கொடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment