பெருந்தோட்ட பகுதிகளுக்கு புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

223 0

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை அமைப்பதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கான திருத்தச்சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு பின்னர் அதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment