தெற்கில் பரவும் வைரஸ் ஆபத்தானது- Dr. ஜனித் லியனகே

246 0

முழு நாட்டிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே உள்ளதாகவும், தெற்கில் பரவும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கராப்பிட்டிய வைத்தியசாலை கிளையின் தலைவர் டாக்டர் ஜனித் லியனகே தெரிவித்துள்ளார்.

தெற்கில் பரவும் வைரஸ் தொடர்பில் சிகிச்சையளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் 10 பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கராபிட்டிய வைத்தியசாலையில் இதில் இரு வைத்திய நிபுணர்களே உள்ளனர்.  நாடு முழுவதும் இது பரவினால் தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற டாக்டர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமெனவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment