அரசாங்கத்துடன் உள்ள பிரபலங்கள் 12 பேர் விரைவில் எதிர்க் கட்சியில்- எஸ்.பீ.

243 0

அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சியில் அமரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களினால் நடாத்தப்பட்டு வருகின்ற “சுதந்திரத்தின் மனச்சாட்சி” பொதுக் கூட்ட நிகழ்வுகளின் போதும் சிலர் தம்முடன் அரசாங்கத்துக்கு எதிராக இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் உள்ள 23 பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் எதிர்க் கட்சியில் இணையவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment