அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் பாரிய எதிர்ப்புக் கூட்டம், ஆர்ப்பாட்டம்- J.O.

231 0

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளினால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடாத்துவதற்கு கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக தெற்கிலிருந்து கொழும்பு வரை பாத யாத்திரையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நுகேகொடையில் பாரிய எதிர்ப்புக் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் முதல் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நாடு முழுவதும் 200 நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடராக நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment