உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு!

239 0

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Leave a comment