வெள்ளம் அடித்து சென்றதில் பாடசாலை மாணவி பலி!

336 0

இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொணிகா் பகுதியில் வெள்ளம் அடித்து சென்றதில் பாடசாலை மாணவி ஒருவா் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (24-05-2018) காலை சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் கொணிகர் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் சிவகுமார் ஷோபனா என்ற மாணவியே உயிரிழந்துள்ளாா்.

பாடசாலை சென்று வீடு திரும்பும் வேளையில் சிறிய ஒரு நீரோடையில் இருந்த வெள்ளம் அச்சிறுமியை அடித்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளாா்.

இந்நிலையில் குறித்த சிறுமியுடன் சென்ற ஏனைய நான்கு சிறுமிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனா்.

நீரில் அடித்துச்சென்ற மாணவியை அப்பிரதேசத்தில் உள்ளவா்கள் தேடிய நிலையில் சிறுமி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளாா்.

இந்நிலையில் குறித்த சிறுமி மூச்சித் தினறி உயிழிந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்..

Leave a comment