சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி

340 0

air_vice_marshal_jayampathyசிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறீலங்கா
அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறீலங்காவின் விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள 55 வயதை எட்டிய நிலையிலும், இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றிலிருந்து எயா மார்ஷல் ஆக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.