நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.