தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண காலநிலை மாற்றத்தினால் 8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, குருநாகல்,பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையானது மே மாதம் இறுதிவரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

