ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 16 பேர் கொண்ட மாற்றுக் குழு புதிய கொள்கைப் பிரகடனம்

249 0

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் குழுவாக இணைந்து கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளது.

பொது மக்களின் வாழ்வுக்குப் பாதிப்பாகவுள்ள 21 அம்சங்கள் இக்கொள்கைப் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

16 பேரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களையும் இப்பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கொள்கைப் பிரகடனம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வுகளை நாடு முழுவதும் நடாத்துவதற்கும் இக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுசில் பிரேம்ஜயந்த் கூறியுள்ளார்.

Leave a comment