சீரற்ற காலநிலை ; இதுவரையில், 7 பேர் மரணம்

538 0

எதிர்வரும் 24 மணித்தயாலங்களில் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதிலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக, இதுவரையில், 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

புலத்கொஹூபிட்டி, உந்துகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 4 பேர் மரணமடைந்ததுடன், மொராகலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a comment