சப்ரகமுவவில் சில பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை

203 0

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதிக மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவினால் அதிபர்களுக்கு பாடசாலகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரத்தை பெற்றுகொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment