யாழ் மதுபான நிலையத்தில் ஆணின் சடலம்

213 0

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து, குறித்த சடலத்தை யாழ். பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

குறித்த மதுபான நிலையத்தில் பணியாற்றி வந்த ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக, யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவராத நிலையில், யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</

Leave a comment