ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது

238 0

மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 122 கிராமும் 820 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

25 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment