2 மில்லியன் தங்க நகையுடன் ஒருவர் கைது

327 0

தனது உள்ளாடையில் இரண்டு மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட நபர் ஹம்பந்தோட்டை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஆடை விற்பனை நிலைய வியாபாரி ஒருவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று (15) முற்பகல் 10.30 மணியளவில் இந்தியாவின் சிங்கப்பூரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

2,034,000 பெறுமதியுடைய 339 கிராம் தங்க நகைகளை குறித்த சந்தேகநபரிடம் இருந்து மீட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment