தங்கள் மீதுள்ள ஊழல் மற்றும் மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை எதிரணியினர் முன்வைப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிகபட்ச சுதந்திரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிரணியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி பெற்றோல் விலை அதிகரிப்பின் காரணமாக எதிரணியினர் போக்குவரத்திற்காக மாட்டு வண்டியில் பிரயாணம் செய்கின்றார்கள்.
இந்த விலை மாற்றம் 2014 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் மிக குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.