இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாது -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

229 0

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாத நிலையில், வடக்கு மாகாண சபை காணப்படுவதாக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் சாத்வீக வழியில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து, மக்களின் குறைகளை கேட்றிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், இரணைதீவு மக்கள் தமது நிலங்களை மீட்பதற்காக எடுத்துள்ள சாத்வீக வழியை, வடக்கு மாகாண சபையும் அங்கீகரிப்பதன் வெளிப்பாடகவே தனது பயணம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

காணிகள் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் ஜெனீவாவில் அளித்துள்ள வாக்குறுதிகளை மீறி செல்ல முடியாது என குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், நாங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் போது ஆம், பார்ப்போம் என்ற பதில்களை மாத்திரம் வழங்குகின்றனரே தவிர, செயலில் காட்டவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment