கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் சற்று முன்னர் அங்கு ஆஜராகியுள்ளார்.

