கஞ்சா பொதிகள் பலவற்றுடன் சந்தேகநபர் கைது

209 0

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பதினைந்து கேரளா கஞ்சா பொதிகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை நேற்றைய தினம் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யூனிட் ஏழு முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கல்மெட்டியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment