தகரக் கொட்டிலில் இருந்து மாணவியின் சடலம் மீட்பு!

280 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் தகரக் கொட்டிலில் இருந்து 17 வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்றையதினம்(14-05-2018) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா வேடர்குடியிருப்பு கடற்கரை வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இந்த யுவதியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாகவும் குடும்பம் சுமுகமாக வாழ்க்கை நடாத்துவதாகவும் இவர் கடந்த ஆண்டு கல்விப்

பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியpருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடைசியாக திங்கட்கிழமை காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைப்பேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக

தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சடலம் உடற்கூறாய்வுக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a comment