வட மாகாணத்தில் பணிபுறக்கணிப்பில் வைத்தியர்கள்

207 0

வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்கள் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில் அதனை வழங்குமாறு கோரி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் வடக்கிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Leave a comment