முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்- முச்சக்கரவண்டி சங்கம்

212 0

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டிசங்கம் அறிவித்துள்ளது.

எட்டரை லட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைக்கவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றத்தையும் தமக்கு சுமந்து கொள்வதற்கு சிரமமானது எனவும், அரசாங்கம் மானியம் வழங்க முன்வரவில்லையாயின் முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் 60 ரூபா கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment