அரச அதிகாரிகள் ஒவ்வொருவரும் நாட்டு மக்களின் ஆணைக்குப் படிந்து சேவை செய்ய வேண்டுமென்றே அரசியல் அமைப்பு வலியுறுத்துவதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.