ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் 8 இற்கு முன்னர் கூடுவதற்கு தீர்மானம்

304 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்ற புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதிக்கு முன்னர் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து அதிருப்தியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஒன்று கூடவுள்ளனர். இவ்வாறு அதிருப்தியாளர்கள் வட்டத்தில் சுமார் 20 பேர் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தம்மிடம் கேற்கவுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உறுதிப்பாடான நிலைப்பாடொன்றை எடுப்பதற்கு இக்குழு கூடுவதாகவும் பின்னாசன எம்.பி.க்களில் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Leave a comment