மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன்

188 0

திருகோணமலை, பாலையூற்று பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் இன்று அதிகாலை 01.05 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மனைவி திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment