களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விநியோகிக்க ஆலோசனை- மஹிந்த

205 0
தற்போதிருக்கின்ற உரப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக, களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விரைவாக விநியோகம் செய்யுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்ரசரவை அதிகாரிகள் மற்றும் லக் பொஹர, கொமர்ஷல் பொஹர நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற உரப் பிரச்சினை காரணமாக பல்வேறு விதமான உரம் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், உரம் வழங்கும் போது அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலை மற்றும் நிவாரண விலையின் கீழ் வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை ஒரு ஒழுங்கு முறையின் கீழ் விநியோகம் செய்யுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment