இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என்றும் அவர்கள் வௌியில் வர வேண்டுமானால் இருக்கும் ஒரே வாழி கோட்டாபய ராஜபக்ஷவை காட்டிக் கொடுப்பதே என்று அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் ஒருபோதும் பொய் கூறி வாழக்கையை பாதுகாத்துக் கொள்பவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புக்களை கண்டுகொள்ளாமல் பல்வேறு விதமாக அவர்களை கஷ்டத்தில் தள்ளி விட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

