கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று (02) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ளது.
விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று (02) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும், காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்