திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் அப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (02) கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.