மடவளையில் பஸ் விபத்து, 32 பேர் காயம்- பொலிஸ்

274 0

மடவளை பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை – குருணாகல் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் கண்டி உள்ளிட்ட அப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a comment