50 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

210 0

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று காலை தாய்லாந்து நோக்கி பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 32 வயதுடைய குறித்த பெண் இத்தாலி நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண்ணின் பயணப்பொதியை சோதனையிட்ட போது இந்தப் போதைப்பொருள் தொகை கண்டெடுக்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

Leave a comment