வவுனியா ஆசிரியையின் கொடூரமான தாக்குதலால் தரம் 04 மாணவன் பலத்த காயம்!!

215 0

வவுனியாவில் ஆசிரியை ஒருவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வரும் பிரபல பாடசாலை ஆசிரியையால் குறித்த மாணவன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தரம் நான்கில் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய மாணவன் குறித்த ஆசிரியையிடம் கல்வி பயில்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமூகம் தராமல் இருந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை குறித்த மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மூக்காலும், காதாலும், இரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் மாணவனின் கன்னம் கண்டல் காயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Leave a comment