இடி தாக்கிய இருவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில்

206 0

ஹட்டன் – டிக்கோயா தரவலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (26) மதியம் 3 மணியளவில் பெய்த இடியுடன் கூடிய மழையின் போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment