முல்லைத்தீவு சிறாட்டிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் காடுகள்!

409 0

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறாட்டிகுளம் கிராம அபிவிருத்தி சங்கம் கோரியுள்ளது

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெருமளவான காடுகள் அழிக்கப்படடு பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் வெட்டப்பட்டுவெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இது சில அதிகாரிகளின் துணையுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகின்ற அதே நேரம் விவசாய கிராமமாக காணப்பட்ட கிராமம் இன்று பாலை வனங்கள் போல் மாறி வருகின்றன.

எமது கிராமத்தை அண்மித்த காட்டுப்பகுதிகளில் தினமும் பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறான காடுகள் அழிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

Leave a comment