பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது.
கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேத விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.