கொழும்பில் வெசாக் பாதுகாப்புக்காக 3000 பொலிஸார் கடமையில்

208 0

வெசாக் தினத்தை முன்னிட்டு பெருமளவான மக்கள் கொழும்பு நகருக்கு வருகைத் தருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 1900 பொலிஸாரும், 1100 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கொழும்பில் 5 வெசாக் வலயங்களில் 11 வெசாக் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த தினங்களில் வீதிவிபத்துக்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a comment