ஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

258 0

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான், சந்தன விஜேசூரிய இன்று (25) உத்தரவிட்டார்.

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் முககாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வாளர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி, குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment