யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை(காணொளி)

3321 0

பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று வருகின்றது.

பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட 4 ஆயிரத்து 204 பட்டதாரிகளான நேர்முகப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.

இந்நேர்முகப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தபட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்; ஒன்லைன் மூலம் 3 ஆயிரத்து 425 பேரும், ஏனைய பதிவுகள் மூலம் 779 பேரும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வில் தோற்றுவதற்க பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் பதிவு செய்த பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்ட செயலகங்களில், கடந்த 16ஆம் திகதி முதல் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment