கிளிநொச்சியில் கடும் வறட்சி – மக்கள் கவலை

299 0

கிளிநொச்சி  மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி  மாவட்டத்தில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னர் மீள்நடுகை செய்யப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் மா, பலா போன்ற மரங்களும் அழிவடைந்து வருகின்றதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்தரு மரங்கள் இவ்வாறு அழிவடைகின்ற போதிலும் இதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a comment