அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் தேசிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் புதிய அமைச்சரவை மாற்றப்படும், அது குறித்து ஜனாதிபதி -பிரதமர் இறுதித்தீர்மானம் எடுக்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் மற்றும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து தற்போது அரசியல் தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

