அத்தனகல்லை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்- பொலிஸ்

270 0

அத்தனகல்லை விகாரைக்கு அருகில் நேற்றிரவு (21) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உதம்விட சமரே என அழைக்கப்படும் நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது. இவர் ஏற்கனவே கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற சங்கீத இசை நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியதுடன், நான்கு பேர் காயமடைந்திருந்தனர். இதில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment