இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

227 0

மேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன.

இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் இடம்பெறும் என மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதும், விசாக நோன்மதி வாரத்திற்காக பாடசாலைகளை அலங்கரிப்பதும் இதன் நோக்கமாகும் என மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் நிமல் குணரத்ன தெரிவித்துள்ளார்

Leave a comment